Tags : celebrities update
அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக […]Read More
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்தவோ, தடை செய்யவோ உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் […]Read More
யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இபடத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, கே.ஜி.எப் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூலை […]Read More
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷின் இசை பக்கபலமாக இருந்தது. இதையடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ’வாடிவாசல்’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் குறித்து முக்கிய தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஒரு முக்கிய பதிலைத் தெரிவித்துள்ளார். […]Read More
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடலின் விடியோ சனிக்கிழமையன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன். மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. திரையரங்கில் […]Read More
சமீபத்தில் டவ்தேவ் புயல் ஒருசில மாநிலங்களைத் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி என்பதும் தெரிந்ததே. இந்த புயல் காரணமாக சுமார் 6000 கிராமத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை பிரதமர் மோடி ஒதுக்கி உள்ளார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவே நடனமாடியும் வித்தியாசமான போஸ் கொடுத்த நடிகை தீபிகா சிங் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் இந்த புகைப்படங்களை அவர் […]Read More
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் […]Read More
பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், எழுத்தாளர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கரிசல் குயில் பறந்தது; இடைசெவலில் மலர்ந்த ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர் கி.ரா.” என புகழாரம் சூட்டியுள்ளார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் […]Read More
சீரியல் நடிகையும் பாடகியுமான சௌந்தர்யா, கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதை பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சௌந்தர்யா. அதனைத் தொடர்ந்து, தற்போது சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவருக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் செய்துவந்துள்ளார். அவர், கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுவது தெரியவந்ததும், அவரை நடிகை சௌந்தர்யா பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் […]Read More