Tags : celebrities update
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘கேஜிஎப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் பல […]Read More
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராகிய கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டைட்டில் மோஷன் போஸ்டரில் இருந்து அவருடைய அடுத்த படத்துக்கு ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளோடு […]Read More
கடந்த ஆண்டு வெளியான விஷாலின் ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம், ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியாது. தற்போது, மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். முதன்மை கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி […]Read More
அல்லு அர்ஜுன் மீண்டும் வேலைக்கு வந்துள்ளார். சுகுமாரின் “புஷ்பா” படத்தின் இறுதி மற்றும் நீண்ட அட்டவணை செவ்வாய்க்கிழமை காலை ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இயக்குனர் சுகுமார் “புஷ்பா” இன் முதல் பகுதிக்குத் தேவையான காட்சிகளை முடிப்பார். இதை இரண்டு பகுதிகளாக வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் கொரோனா வைரஸை ஒப்பந்தம் செய்திருந்தார், அதன்பிறகு படம் அதன் படப்பிடிப்பை நிறுத்தியது. 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்த அல்லு அர்ஜுன் […]Read More
நடிகர் விஜய்யின் 65வது படம் ‘பீஸ்ட்’ என தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய்யின் 47வது பிறந்த நாளன்று வெளியானது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் ‘பீஸ்ட்’. நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட நெல்சன் திலீப்குமார்தான் இயக்குநர் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டாம் அலை […]Read More
இயக்குனர் சுப்ரமண்யம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியோர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட திரைப்படம் வெள்ளை யானை. முதலில் இந்த படத்தை தனுஷ்தான் தயாரித்து வந்தார். ஆனால் அதன் பிறகு இப்போது அவரின் மேலாளர் வினோத் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி யுள்ளது. விவசாயிகளின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள மற்றொரு படமாக இது இருக்கும் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ முடிந்து […]Read More
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காலா’.இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு, தயாரிப்பில் கவனம் செலுத்திவந்த பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு சார்பட்டா பரம்பரை எனும் பெயரில் இப்படம் உருவாகிவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கான […]Read More
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் கதாநாயக வாய்ப்புகள் கிடைக்காததால் குணச்சித்திர வேடங்களுக்கு தாவினார். இப்போது தெலுங்கில் முக்கிய நடிகராக உருவாகியுள்ளார். இந்நிலையில் இப்போது முதல் முதலாக அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த தொடரை அவரின் மனைவி ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்க, தூங்காவனம் மற்றும் கடாரம் கொண்டான் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்க […]Read More
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் சதீஷ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல கவனம் ஈர்த்தது. அதேபோல் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் […]Read More
‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். ‘கடைசி விவசாயி’ படத்தின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் இளையராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். கருத்து வேறுபாட்டால் அவர் விலகவே, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்த படம் முழுவதுமாக […]Read More