நீண்டகாலம் கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த தின தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை இறந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் #மதுசூதனன் அவர்கள் […]Read More
Tags : political updates
EXCLUSIVE: கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை! படங்கள் தொகுப்பு….
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுகவின் பொருளாளரும், மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர். பாலு, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்நது, கலைஞர் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் 38,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை […]Read More
தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமையுடன் உடன் முடிவடைகிறது. இதனை அடுத்து தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் உடன் உள்ள ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிக்கை வெளியிடுவார் […]Read More
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று […]Read More
கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தமிழகத்தில் தலைமை செயலாளர் இன்று
சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. பொது இடங்களில் […]Read More