Tags : Lockdown

cinema Latest News Tamil cinema

நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் அக்‌ஷய்குமாரின் படங்கள்!

கொரோனா ஊரடங்கால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் படங்களும் ஓ.டி.டி.யில் வருகின்றன. இந்த நிலையில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ இந்தி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. 1980-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் தயாராகி உள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார். கியூமா குரோஷி, வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பெல்பாட்டம்’ படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்து இருந்தனர். […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று (24.05.2021) காலை முதல் அது நடைமுறைக்குவந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி தேவையில்லாமல் சாலையில் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளும் முழு ஊரடங்கை முன்னிட்டு முழுவதும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததால், தமிழகம் முழுவதும் […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு கடுமையான முழு ஊரடங்கு..!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இது வரும் 24-ம் தேதி அதிகாலை 4 மணியுடன் முடிவடையும் நிலையில், புதிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு […]Read More

cinema Latest News

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மாஸ்க் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது . அந்த வகையில் திரை உலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா […]Read More

Latest News News Tamilnadu

15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி? தடை?

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். • வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை […]Read More

Latest News News Tamilnadu

நாளை முழு லாக்டவுன் ரத்து.. இன்றும் இரவு 9 மணி வரை கடைகள்

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழகத்திலும், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. தலைநகர் சென்னையிலும் மிக மோசமாக வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா முதல் அலையின் போது, லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது போன்று, இப்போதும் முழு […]Read More

Latest News politics

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை […]Read More

covid19 Latest News

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா […]Read More

covid19 Latest News

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு லோக்கடவுன் ? டுவிட்டரில் டிரெண்டிங் !

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மும்பை, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்களில் ஊரடங்கு, தியேட்டர்கள் மூடல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டபை தேர்தல் நடந்து வந்ததால் எந்த […]Read More

Latest News News Tamilnadu

“கொரோனா பரவல் தடுப்பு பணி” மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் நேற்று 1385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது கடந்த வாரம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !