கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

 கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் ஆய்வகங்களில் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான ரூ.1200-ல் இருந்து ரூ.900 ஆக குறைப்பு. வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • 9 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !