ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

 ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 20 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !