ஒன்ஸ் அப்பான் அன் ஐஏஎஸ் எக்ஸாம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள ஒடிசி புக் செண்டரில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் சமூக அக்கறை மிகுந்த படங்களுக்காக அறியப்பட்ட இயக்குனர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். விழா மேடையில் கலந்துக்கொண்டு இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது : டாக்டர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் எழுதியிருக்கும் இந்த புத்தகம் நம்மை ஊக்கப்படுத்தக் கூடிய ஒரு புத்தகம்.
ஐ.ஏ.எஸ் பணி என்பது மிகவும் உன்னதமானது. ஒரு மருத்துவர் சமுதாயத்துக்கு புரியும் சேவையை போல, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சேவை புரிந்து தற்போது தனது எழுத்து மூலம் சமுதாயத்துக்கு சேவை புரிய வந்திருக்கிறார். அவர் மிகச்சிறப்பான ஒரு வேலையை செய்திருக்கிறார். இந்த மாதிரியான புத்தகங்கள் நமக்கு வெற்றிக்கான வழியை அடையாளம் காண உதவுகின்றன.
இந்த புத்தகம் பல தரப்பு மக்களுக்குமானது. அவரின் கதை நம்மில் பலருக்கு பொருந்த கூடியனவாக இருக்கிறது. அதற்காக எழுத்தாளர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார்.